பிரச்னை என்ன?
சோம்பேறித்தனம்!
மசமசப்பு.
கூடப்பிறந்தது.
வெறுக்க வேண்டாம்.
விரும்பு.
வழிகள் தான் இருக்கின்றன்வே!
அந்த வழிகளைத்தான் நன்கு அறிவேனே!!
அதில் ஒன்றுதான் ஆபீஸ் டயரி எழுதுவது.
இதோ 2008, வாரம் மூன்று எழுதுகிறேனே.
இரண்டு Estimate கள் படு பயங்கரமாக முழிக்க வைத்துக்கொண்டுள்ளன.
சுறு சுறுப்பாக Sr.AFA யிடம் discuss செய்து வழி செய்து விடலாம் என்று நினைத்தேன்.
Sr.AFA யிடம் சென்றால் supplementary M&P proposal ஒன்றைக்குறித்து முழிக்க வேண்டியதாகிவிட்டது!
அப்புறம் Chittaranjan Das வந்தான். ஒரு Estimateக்கு quantity justification, ஒரு itemக்கு விலை எல்லாம் புரிந்து விட்டது. Dy.யிடம் சொன்னால், vetted என்று எழுதி வேலையை முடித்து விடலாம் என்று நம்பிக்கை கொண்டேன்.
இல்லை...... அந்த படவா
"ஐய்யோ இதற்கு condition எழுத வேண்டும்" என்று வேலைக்கு முற்றுப் புள்ளி வைக்க விடாமல்..... மீண்டும் புள்ளிகள் வைத்தான்.
Trouble with these people.....என்னவென்றால், அவனுங்களுக்கு தலை போகவில்லையென்றால் அல்லது credit வராது என்றால், மீண்டும் மீண்டும் புள்ளிகளை வைக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அந்தப் புள்ளிகளை சரியானபடி ஏற்றுக்கொள்வதுதான் என் பொழப்பு.
நீதி: சுறுசுறுப்புக்கு சந்திரசேகரிடம் போகத்தேவையில்லை.
கடவுள் அதற்கு வேறு வழி வைத்திருக்கிறார்.
இவனுங்க பிஸியாக இருந்து விடுவாங்க. நம்ம வேலைக்குப் போக சில சமயம், "நேரம்" சரியில்லாமல் போய் விடும். இந்த தருணத்தில் எனக்கு லீவ் எடுக்க வேண்டும்.... அவனிடம் போனால் இன்னும் ஐந்து நிமிடம் என்கிறான்.
அந்த ஐந்து நிமிடங்களை, அந்த நச்சரிக்கும் வேலையை மறந்து வேறு பிடித்தமான வேலையை பிடிக்க மிகவும் கடினமாக உள்ளது. ஒரு உற்சாகமான டானிக் வேலை கிடைத்து விட்டால் சிரிக்கலாம், இல்லையென்றால் மிகவும் சிணுங்க வேண்டியுள்ளது.
9 நாட்கள் லீவ் கிடைத்துவிட்டது. SrDFA யிடம் discuss செய்ததில் சில வேலைகள் நகரும் நிலமைக்கு வந்தது. குஷி.
இந்த வாரத்தில் கடந்த சில தினங்களாக இறுகிக்கிடந்த மனது, லேசானது!
கடவுளே இந்த லேசான மனதைக் கொண்டு, பாட புத்தகங்களைப் படித்தால் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் வாங்கலாம்.
மனதை லேசாக சுறுசுறுப்பாக வைத்திருப்பது கடவுளே உன் பொறுப்பு.

நினைவேறுகிறது…