பெங்களூரு STC முதல் நாள்:தொடங்குவதற்கு முன்னால் - பெங்களூரில் நான் தங்கை/மாமியார் வீட்டில் தங்கியிருந்தேன். மாமியார், "ஆபீஸ் வேலை அதிகமா?" என்று வினவியதற்கு பதில்: "ஓ அப்படி ஒன்றும் இல்லை. மஜாதான். லெக்சரர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அவ்வளவு தான்." என்று பதிலுரைத்தேன். சரி அடுத்த வரிக்கு:
Inpire செய்த லெக்சரர்கள்: பட் 70 வயதிலும் ஆர்வத்துடன் யோகா சொல்லிக்கொடுத்தார்.
காகாரென் Morale பற்றிச் சொல்லிக் கொடுக்கையில், பகவத் கீதை பைபிள் குரானிலிருந்து வாக்கியங்களை அள்ளித்தந்தார்.
நாள் இரண்டு:
STC யில் இன்று Annual Day. அங்கு வாழையிலையில் படைத்த விருந்தை ஒரு வெட்டு வெட்டினேன். Annual Day மற்றும் வகுப்புகளில் Southern Railway தமிழ் கலாச்சாரம் கல்ந்திருந்தது.
மூன்றாம் நாள்:தங்கை கட்டிக்கொடுத்த சப்பாத்தியை சாப்பிட ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்ஃபாரம் போய் வருவதற்குள், காலை 8.50 பிரார்தனை நிகழ்சிக்கு தாமதமாகி விட்டது. ஒரு ஓரமாய் நின்று "ஜகம் நீ...." பாடலை ஒரு Trainee இனிமையாகப் பாட ரசித்தேன். இளையா ராஜா பாடிய அந்த சுகமான பாடலை மற்றொரு முறை கேட்க விரும்புகிறேன். இந்த பதிவில் வைத்துக்கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.
நான்காம் நாள்: Emerson Doss மற்றும் Sreedhar ஆபீசர்களில்லை. டீம் வர்க் மற்றும் சந்தோஷம் பற்றி சொன்னார்கள். என்க்கும் அது மாதிரி வகுப்பு எடுக்கும் ஆசை. சந்தர்ப்பம் கிடைக்குமா? ஒரு subject வைத்துக் கொண்டு மூன்று மணி நேரம் பேச முடியுமா? Principle game ஆட வைத்த சந்திர சேகரனின் சுறுசுறுப்பான Outlook ரசித்தேன்.
ஐந்தாம் நாள்:STC வண்டியில் எங்கள் வகுப்பு குழாமுடன் பெங்களூரு சுற்றிப் பார்க்கும் சந்தர்பத்தை ஒதுக்கி விட்டு இரண்டு மணி நேர Internet அனுபவித்தேன். (ரயில்வே ஸ்டேஷனில் டாடா.) இன்று இக்பால் அஹமத் DAR Inquiry class எடுத்தார்.
ஆறாவது நாள்: ஆஹா முடிந்து விட்டது. சான்றிதழ் கொடுத்தார்கள். Gabriel Anthony pillai வந்தார். Communication சொல்லிக்கொடுத்தார். முன்பு இரண்டு சந்தர்பங்களில் அவரது பேச்சை கேட்டிருக்கிறேன். நல்ல வேகமாக பேசுகிறார் இப்பொழுது! Gabriel Anthony pillai பற்றி முன்பு யாஹூவில் கிறுக்கி வைத்த கிறுக்கலின் Link.
முடிவுரை:இந்த பயிற்சி மனதிற்கு சாந்தியாக இருந்தது. தங்கை வீட்டில் தங்கி இருந்தேன். அவர்கள் குடும்பத்தினருடனும், கணேஷ் பாபுவுடனும் சாந்தியாக பொழுதைப் போக்கினேன். சில குறிப்புகள் மன்தில் தங்கியுள்ளது. நேரம் கிடைத்து குறிப்புகள் ஞாபகமிருந்தால் தனியாக Blog செய்து கொள்கிறேன்.
அடுத்த வாரம் ஹுப்பளியில்.........

நினைவேறுகிறது…