சின்னதாக எழுதப் பிடிக்கிறது.
சின்னதாகப் படிக்க பிடிக்கின்றது.
நிறைய எழுத, படிக்க முடிவதில்லை.
குழப்பம் தான் மிஞ்சுகிறது.
ஒரு கட்டத்தில் மனதில் ஒன்றும் தோன்றுவதேயில்லை.
அதற்காக சும்மா இருப்பதா?
ஒரு வார்த்தை எழுதுவோமே.
ஒரு வாக்கியம் எழுதுவோமே!
அப்படி மற்ற மனிதர்களிடம் பேசுவோமே!
அவர்களின் எண்ணங்களை எழுத பார்ப்போமே!
ஓரளவிற்கு மற்றவர்களுடன் பேசுகையில் மனம் உற்சாகம் அடைகிறதே!!!
அதே உற்சாகத்துடன்.. எழுதுவோமே கொஞ்சமாக..

நினைவேறுகிறது…